தமிழகத்தில் இன்று 5,222 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்.
தமிழகத்தில் இன்று 5,242 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 6,51,370ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனாவில் இருந்து இன்று 5,222 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 5,97,033பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், கொரோனாவால் இன்று 67 பேர் உயிரிழந்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,187 ஆக அதிகரித்துள்ளது.