மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 24,000 ஐ தாண்டியது.!

மஹாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 1026 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 24,427 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நேற்று ஒரே நாளில் 339 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார்.

அதில், நேற்று ஒரே நாளில் 34 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளதால், அம்மாநிலத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 921 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதார துறை அமைச்சர் ராஜேஷ் டொப் தெரிவித்தார்.