பாக்கத்தானே போற இந்த காளையோட ஆட்டத்தை.. இம்ரான் தாஹிர்..!

சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு புதிய ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வருகின்ற செப்டம்பர் மாதம் 19ம் தேதி நடைபெறவுளல்லது அதிலும், இந்தியாவில் நடக்க சாத்திய மில்லாததால், ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு நாட்டிலும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் மேலும் இதற்காக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று துபாய் புறப்பட்டது. தோனி, ரெய்னா, ஜடேஜா,இம்ரான் தாஹிர் உட்பட விளையாட்டு வீரர்கள் 16 பேர் மற்றும், அணி நிர்வாகத்தினர், பயிற்சியாளர்கள் என மொத்தம் 51 பேர் தனி விமானம் மூலம் துபாய் புறப்பட்டு சென்றனர்.

இந்நிலையில் இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்த பிறகுதான் துபாய் புறப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் தனது ட்வீட்டர் பக்க்கத்தில் “என் இனிய தமிழ் மக்களே உங்கள் நலம் நலமறிய ஆவல் பலமுறை வாழ்ந்தோம் என்றோம் சென்றோம் வருகிறோம் வாழும் செல்வோம் உங்கள் நல்லாசியுடன் பாக்க தானே போறீங்க காளியோட ஆட்டத்தை எடு வண்டிய போடுடா விசில்’ என்று பதிவு செய்துள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.