சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கை மீறினால் உடனடியாக கைது செய்ய காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னையில் கொரோனோ தொற்று அதிகரித்து வரும் நிலையில், நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பழனிசாமி ஒரு அறிவிப்பினை வெளியிட்டார். அதில் அவர், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்க ளில் வரும் ஜூன் 19 தேதி முதல் 12 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
இந்த 4 மாவட்டங்களில் இருந்து பிற மாவட்டங்களுக்கு வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது , மேற்கண்ட மாவட்டங்களில் இருந்தும் முறையான அனுமதி இல்லாமல் பிற மாவட்டங்களுக்கு செல்பவர்களை சிறைப்பிடித்து தனிமைப் படுத்தவும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யவும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கவும் காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் சோதனை சாவடியில் அதிகாரிகள் உள்ளன.
அத்தியாவசிய தேவை இன்றி தடையை இயக்கப்படும் வாகனங்கள் போலீசார் எச்சரித்துள்ளனர் பறிமுதல் செய்யப்படும் என முழு ஊரடங்கின் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளின் 15 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர் உடல்நிலை குறைவு உள்ளவர்கள் 50 வயதுக்கு மேற்பட்ட போலீசார் காவல் ஆணையர் விதிவிலக்கு அளித்து உள்ளார். இந்த பணிக்காக சட்டம் ஒழுங்கு குற்ற பிரிவு ரவுடிகள் ஒழிப்பு மத்திய குற்றப்பிரிவு உள்ளிட்ட பணிகளில் அமர்த்தப்பட்ட போலீசார் மீண்டும் அழைக்கப்பட உள்ளனர்.