‘நான் சாக போறேன்’- மதுரை காவல் ஆணையருக்கு வீடியோ அனுப்பிய டிக்டாக் பிரபலம்…!

மதுரை காவல் ஆணையருக்கு தான் சாக போவதாக பேசி வீடியோ அனுப்பிய டிக்டாக் பிரபலம் சூரியாதேவி.

திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் வசிக்கும் சூர்யா தேவி என்பவர், சமூகவலைத்தளங்களில், அரசியல், சினிமா நடிகைகள் மற்றும் டிக்டாக் பிரபலங்களை;’/. விமர்சித்து வீடியோ வெளியிட்டு, அதன் மூலம் விளம்பரம் தேடி வந்தார்.

இந்நிலையில், சூர்யா தேவியின் ஆண் நண்பரான சிக்கந்தருடன் தகராறில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. இதனையடுத்து, சூர்யா தேவி மீது மதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான சூர்யா தேவியை போலீசார் தேடி வந்த நிலையில், சூர்யா தேவி தான் தற்கொலை செய்துகொள்ள போவதாக மதுரை காவல் ஆணையருக்கு ஒரு வீடியோவை  அனுப்பியுள்ளார்.

இதனையடுத்து, காந்திநகரில் உள்ள அவரது வீட்டிற்கு போலீசார் சென்றனர். அப்போது அவர் தனது வீட்டில் உட்பக்கம் தாழிட்டு, மின்விசிறியில் தூக்குமாட்டிக்கொள்வது போல், கட்டிவைத்துவிட்டு, அங்கிருந்த கட்டிலில், சூர்யா தேவி, அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்துள்ளார்.

இதனை பார்த்த போலீசார் இதுவும் ஒரு தற்கொலை நாடகம் தானா? என போலிஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது, தான் மனஉளைச்சலில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து சூர்யா தேவியை ஆறுதல்படுத்திய போலீசார், அருகில் உள்ள அவரது வீட்டில் ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.