சென்னை மாநகராட்சி பகுதிகளில் சட்ட விரோத பேனர்களை கண்காணிக்க ரோந்து வாகனம் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ஸ்கூட்டியில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் வந்துகொண்டிருந்தபோது அவர் மீது சாலையில் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.அந்த சமயத்தில் அவர் பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் பேனர் குறித்து சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.சென்னை மாநகராட்சி பகுதிகளில் சட்ட விரோத பேனர்களை கண்காணிக்க ரோந்து வாகனம் இயக்கப்படும். சென்னை காவல் துறையுடன் இணைந்து செயல்படுத்தப்படும் .பிரத்யேக தொலைபேசி எண்ணுடன் கூடிய 3 ரோந்து வாகனங்கள் இயக்கப்படும்.மண்டலங்களை வட்டாரங்களாக பிரித்து ரோந்து வாகனம் இயக்கப்படும்.94451 90205, 94451 90698, 94451 94802 ஆகிய தனி அலைபேசி எண்ணுடன் கூடிய 3 ரோந்து வாகனங்கள் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…