இளையராஜா 75 இசை நிகழ்ச்சியை நடத்த ஒப்புதல் பெற வேண்டும் !!!!தயாரிப்பாளர் அதிரடி கருத்து!!!

இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர்.  அறிமுகமானார். இதுவரை 1000 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களுக்கு இசையமைத்துள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பின்னணி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஓன்றே. இதனால் தமிழ் திரையுலகில் இசைஞானி என்னும் பெயரால் அனைவராலும் அழைக்கப்படுகிறார்.

மேலும் இசைஞானி சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் இவரின் 75வது பிறந்தநாளை ஒரு கல்லூரியில் வைத்து கொண்டாடினார்.

இளையராஜா ஒரு இசை நிகழ்ச்சியை நடத்த போவதாக கூறியிருந்தார். இந்த இந்நிகழ்ச்சியின் மூலம்,  கஷ்டப்படும் தயாரிப்பாளர்களுக்கு உதவப்போவதாக கூறியிருந்தார். இளையராஜா நிகழ்ச்சிக்கு தடைகோரி தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. சதீஷ்குமார் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். இந்த மனுவை  நீதிபதிகள், விசாரித்தனர். மேலும் மனுவுக்கு வரும் 28-ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கம் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் சதீஷ்குமார் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் இளையராஜா இசை நிகழ்ச்சி 75 யை நடத்த பொதுக்குழு வைத்து அனைவரிடமும்  ஒப்புதல் பெறவேண்டும் என்று தயாரிப்பாளர் சதீஷ்குமார் கூறியுள்ளார்.

Leave a Comment