கொரோனா,கேன்சர் நோய்களுக்கு  நவீன தொழில்நுட்ப சிகிச்சை – இந்திய விஞ்ஞானிகள் சாதனை!

கொரோனா,கேன்சர் நோய்களுக்கு  சிகிச்சையளிக்கும் நவீன தொழில்நுட்ப முறையை ஐஐடி மெட்ராஸ் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த எம்ஐடி சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.

மருத்துவ ஆய்வுக்காகவும் கொரோனா,கேன்சர் மற்றும் மூளை நரம்பியல் நோய்களான அல்சைமர் மற்றும் பார்க்கின்சன் போன்ற நோய்களுக்கு எந்த மாதிரியான மருத்துவ சிகிச்சை முறை அளிப்பது என்று,ஐஐடி மெட்ராஸ் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த எம்ஐடி விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர்.

அதன் விளைவாக,’ஆர்கனாய்டுகள்’ எனப்படும் மனித மூளை திசுக்களை செயற்கையாக வளர்க்கும் “3D பிரிண்டட் இங்குபெஷன் மெஷினை” கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளனர்.இதன்மூலமாக,மூளை திசுக்களின் வளர்ச்சி கண்காணிக்கப்பட்டு,கொரோனாவுக்கான முன்னெச்சரிக்கை மருத்துவ ஆய்வு,கேன்சர் மற்றும் மூளை நரம்பியல் நோய்களான அல்சைமர் மற்றும் பார்க்கின்சன் போன்ற நோய்களுக்கு எந்த மாதிரியான மருத்துவ சிகிச்சை முறை அளிப்பது என்பதையும் கண்டறிய முடியும்.

பொதுவாக,நீண்ட நாட்கள் மூளையின் திசுக்களை செயற்கையாக வளர்ப்பது சவாலானதாக இருக்கும்.ஏனெனில்,இன்குபேசன் மற்றும் இமேஜிங் முறையில் செல்களை தனியாக பிரித்து ஆராயும்போது அது தவறான முடிவுகளையும் அல்லது அந்த செல்கள் மாசடைய வாய்ப்பும் உள்ளது.ஆனால்,தற்போது கண்டுபிடிக்கப்பட்ட புதிய முறையின் மூலம் செல்களை எளிதாகவும்,எந்த தடையும் இன்றியும் வளர்க்க முடியும்.

இதன்மூலம்,முன்கூட்டியே கொரோனா பாதிப்பு மற்றும் கேன்சருக்கான மருந்துகளை எளிதில் கண்டறிய முடியும்.அதனால்,வரும் காலங்களில் இந்த புதிய முறை மருத்துவ உலகில் வரப்பிரசாதமாக கருதப்படும்.