“மாநிலத்தின் எதிர்கால சொத்து” என கூறி மாணவியை பலாத்காரம் செய்த மாணவருக்கு ஜாமீன்..!

ஐஐடி கவுகாத்தியில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில் பிடெக் மாணவருக்கு இன்று ஜாமீன் வழங்கப்பட்டது.

ஐஐடி கவுகாத்தியில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஐஐடி-கவுகாத்தியின் பிடெக் மாணவருக்கு இன்று ஜாமீன் கிடைத்துள்ளது.

கடந்த மார்ச் 28 ஆம் தேதியன்று இரவு, ஐஐடி கவுகாத்தியில் மாணவி ஒருவர், அதே கல்லூரியை சேர்ந்த மாணவர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அதன் பின்னர், சம்பவ இடத்தில் இருந்து அடுத்த நாள் மீட்கப்பட்டு அம்மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த மாணவர் ஏப்ரல் 3-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை கவுகாத்தி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. குற்றம் சாட்டப்பட்ட மாணவர் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்து இருந்த நிலையில்,   “மாநிலத்தின் எதிர்காலச சொத்து” என்று கூறி கவுகாத்தி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

மேலும், இது தொடர்பாக, ஐஐடி-கவுகாத்தியின் நீதிபதி அஜித் போர்த்தகூர் கூறியதாவது, “அனைத்து ஆதாரங்களின் அடிப்படையில் இந்த வழக்கின் விசாரணை முடிந்துவிட்டதால், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என இருவரும் மாநிலத்தின் எதிர்கால சொத்துக்கள், ஐஐடி, கவுகாத்தியில் தொழில்நுட்பப் படிப்புகளைப் படிக்கும் திறமையான மாணவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தொடர்ந்து காவலில் வைத்திருப்பது அவசியமற்றதாகிவிடலாம் என்று தெரிவித்துள்ளார்.

19 முதல் 21 வயதுக்குட்பட்ட இருவரும் வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். குற்றப்பத்திரிகையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள சாட்சிகளின் பட்டியலை ஆராய்ந்தால், குற்றம் சாட்டப்பட்டவர் தங்கள் சான்றுகளை சேதப்படுத்தவோ அல்லது ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவர்களை பாதிக்கும் வாய்ப்பு இல்லை” என்று கூறியுள்ளது.

பின்னர், கவுகாத்தி உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ரூ.30,000 பிணைபத்திரத்துடன் ஜாமீன் வழங்கியது.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

காமெடி வேற லெவல்! சிரிக்க வைக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ டிரைலர்!

Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…

12 mins ago

பட்ஜெட் விலையில் அசத்தல் 5G ஸ்மார்ட்போன் !! ரயில்மி சி 65யின் அம்சம், விலை விவரம் இதோ !!

Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…

12 mins ago

அதிர்ச்சி ரிப்போர்ட்.! 75% பேர் போலியான DeepFake விடீயோக்களை பார்த்துள்ளனராம்..!

DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் விடீயோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…

13 mins ago

தினமும் உடற்பயிற்சி செய்பவரா நீங்கள்? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்..

Morning Exercise-காலையில் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை இப்பதிவில் காணலாம். உடல் ஆரோக்கியமாகவும் ,கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி பயிற்சியின்…

1 hour ago

உலக கோப்பைக்கு அபிஷேக் சர்மா சரிப்பட்டு வரமாட்டார்! யுவராஜ் சிங் பேச்சு!

Abhishek Sharma : உலக கோப்பைக்கு அபிஷேக் சர்மா சரிப்பட்டு வரமாட்டார் என யுவராஜ் சிங் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் அபிஷேக்…

1 hour ago

பிரதமர் பதற்றத்தில் இருப்பது பேச்சிலேயே தெரிகிறது… ராகுல் காந்தி விமர்சனம்!

Election2024:பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் கண்ணீர் சிந்துவார் என தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார் மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும்…

2 hours ago