, , ,

அதிமுகவில் வென்று விட்டு கட்சி மாறினால் வீடு புகுந்து வெட்டுவேன்..! – அதிமுக ஒன்றிய செயலாளர் சண்முக கணேஷ்

By

சாத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முக கணேஷ், இரட்டை இலையில் போட்டியிட்டு வெற்றிபெற்றுவிட்டு யார் கட்சி மாறினாலும், அவர்களை வீடு புகுந்து வெட்டுவேன் என தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் பிப்.19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெறவுள்ள நிலையில், இதற்கான முன்னேற்பாடு பணிகளில் ஒவ்வொரு  கட்சிகளும் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், விருதுநகர் கிழக்குமாவட்ட  அதிமுக சார்பில், சாத்தூரில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதில் பேசிய சாத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முக கணேஷ், இரட்டை இலையில் போட்டியிட்டு வெற்றிபெற்றுவிட்டு யார் கட்சி மாறினாலும், அவர்களை வீடு புகுந்து வெட்டுவேன் என தெரிவித்துள்ளார். மேலும், இதற்காக தன்மீது வழக்கு பதிவு செய்தாலும் பரவாயில்லை. எனவே கட்சி மாற நினைப்பவர்கள் மரணத்திற்கு தயாராக இருங்கள் என்றும் எச்சரிக்கை  விடுத்துள்ளார்.

Dinasuvadu Media @2023