ரஷீத் கான் பந்து வீச வந்தால் காலி செய்வேன்- கெயில்..!

ரஷீத் கான் பந்து வீச வந்தால் அவரை காலி செய்வேன் என்று கெயில் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் மற்றும் மயங்க அகர்வால் வீடியோ கால் மூலம் பேசும் பொழுது கேஎல் ராகுல் கெயில் பற்றி கூறுங்கள் என்று கேட்டதற்கு கெயில் ” கிறிஸ் கெயில்  பேட்டிங் பற்றி சொல்லியே தெரியவேண்டாம், அவரும் நானும் ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணிக்காக துவக்க ஆட்டக்காரராக களமிறங்குவோம், அப்பொழுது மைதானத்தில் பேட்டிங் பற்றி சில கருத்துக்கள் எனக்கு வழங்குவார்.

மேலும் அதில் குறிப்பாக கடந்த 2018ம் ஆண்டு கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணி மற்றும் சன் ரைஸ் ஹைதராபாத் நடந்த போட்டியில் கிறிஸ் கெயில்  என்னிடம் ரஷித் மீண்டும் பந்து வீச வந்தால் அவரை நான் காலி செய்துவிடுவேன், சுழற்பந்து வீச்சாளர்கள் என்னை முறைத்தாள் எனக்கு புடிக்காது என்றும், அப்படி முறைத்தாள் அவர்களுடைய பந்தை காலி செய்துவிடுவேன் என்று கிறிஸ் கெயில் கூறியதாக கேஎல் ராகுல் கூறியுள்ளார்.

இந்நிலையில் மேலும் கேஎல் ராகுல் கூறியது “நான் கிறிஸ் கெயிலை  வித்தியாசமாக அன்றுதான் பார்த்தேன், அவருடைய கோபத்தில் சதம் அடிப்பார் என்று நான் நினைத்தேன் ஆனால் அதே போல் பேட்டிங்கில் மிரட்டி சதம் அடித்தார் என்றும் கூறினார். அந்த போட்டியில் கெயில் 63 பந்துக்கு 102 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.