மம்தா பானர்ஜி துப்பாக்கிச் சூடு நடத்த விரும்பினால் முதல்வர் நாற்காலியை விட்டு வெளியேற வேண்டும்.!

செவ்வாயன்று, மேற்கு வங்கத்தில் TMC அரசாங்கத்தின் ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராக பாஜக நடத்திய  ‘நபன்னா சலோ’ போராட்ட ஊர்வலத்தின் போது, ஏற்பட்ட வன்முறை மோதல்களில் காவல்துறை அதிகாரிகள், பாஜக ஆதரவாளர்கள் என பலர் காயமடைந்தனர்.

‘நபன்னா சோலோ’ பேரணியில் ஏற்பட்ட வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது கருத்தை வெளியிட்டுள்ள பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்பாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த விரும்பினால் அவர் முதல்வர் நாற்காலியை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேற்கு வங்காளத்தில் ஊழல் மற்றும் வம்ச அரசியலுக்கு எதிராக கட்சியின் ‘நபன்னா சோலோ’ ஒரு வெகுஜன இயக்கமாக மாறியுள்ளதாக தெரிவித்தார்.

author avatar
Dinasuvadu Web

Leave a Comment