ஆன்லைன் மோசடியால் 2.5 மில்லியன் டாலர்கள் இழந்த ஐசிசி.!

சர்வதேச கிரிக்கெட் வாரியம்(ஐசிசி), ஆன்லைனில் சூழ்ச்சியால் 2.5 மில்லியன் டாலர்கள் இழந்துள்ளதாக தகவல்.

ஆன்லைன் மோசடிகள் தற்போது உலகெங்கும் பெருகிவருகிறது. ஆன்லைனில் எளிதாக அனைவரும் ஏமாந்துவிடுகின்றனர். இதில் ஐசிசியும் விதிவிலக்கல்ல. ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் வாரியம், ஆன்லைன் மோசடிக்கு உள்ளாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த மோசடியில் ஐசிசி 2.5 மில்லியன் டாலர்கள்(இந்திய மதிப்பில் சுமார் 20 கோடி) இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐசிசி இது குறித்து அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை என்றாலும் ஐசிசி சமீபத்தில் இதுபோன்ற ஒரு ஆன்லைன் மோசடிக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஐசிசி போன்ற மிகப்பெரிய நிறுவனத்திற்கு கூட இந்த தொகை பெரியது.

இந்தத் தொகையானது, ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு அசோசியேட் அணிக்கு வழங்கப்படும் நிதிக்கு சமமானதாகும். ஐசிசி இழந்த தொகையை மீட்க கோரி, தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
Muthu Kumar

Leave a Comment