நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி இருவரும் இணைந்து சில படங்களில் நடித்ததன் மூலம் இவர்களுள் காதல் மலர்ந்தது. இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த மே மாதம் இருவரும் தங்களுடைய பெற்றோர்களின் முன்னிலையில், திருமணம் செய்துகொண்டார்கள்.
திருமணத்தை தொடர்ந்து இந்த ஜோடி தேனிலவுக்காக பாரிஸுக்கு சென்றிருந்தார்கள். அதற்கான புகைப்படங்களும் கூட இணையத்தில் வைரலானது. திருமணம் ஆகி 6 மாதங்கள் நேற்றுடன் 6 மாதங்கள் ஆனது. எனவே, நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் பரவியது.
மேலும் நிக்கி கல்ராணி, கர்ப்பமாக இருப்பதால் தான் நிகழ்ச்சியில் பங்கேற்பதை தவிர்த்து வருவதாகவும் தகவல்கள் பரவியது. இதனைல் பலரும், அவர் உண்மையில் கர்ப்பமாக இருப்பதாக அவரது ரசிகர்கள் இணையத்தில் வாழ்த்துக்களையும் தெரிவித்துவிட்டார்கள்.
இதையும் படியுங்களேன்- தயவுசெஞ்சி அப்படியெல்லாம் பண்ணாதீங்க… கடுப்பா இருக்கு.. வத்திகுச்சி வனிதா ஆவேசம்.!
இதனை, மறுத்துள்ள அவர், சமீபத்திய பேட்டி ஒன்றில் ” நான் கர்ப்பமாக இருப்பதாக வைரல் செய்திகளை கொடுத்தவர்கள் குழந்தை பிறக்கும் தேதியை கூறியிருக்கக்கூடாதா..? என கிண்டலடித்துள்ளார். பிறகு இந்த மாதிரி நல்ல செய்தியை நானே சொல்வேன்” என்று கூறியுள்ளார்.