ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு அற்பமான ஒன்று – ஈபிஎஸ்

பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவு தான் இறுதியானது. அதில் நீதிமன்றங்கள் தலையிட வேண்டாம் ஈபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு. 

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், அதிமுக தலைமை அலுவலகத்தை சூறையாடி, கட்சியின் விதிகளை ஓபிஎஸ் மீறியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

பொதுக்குழு கூட்டுவதற்கு முன் ஓபிஎஸ்-க்கு  வழங்கப்பட்டது. அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியே பொதுக்குழு கூட்டப்பட்டது. தொண்டர்களின் விருப்பதிற்கிணங்கவும், கட்சியின் நலன் கருதியும் ஒற்றை தலைமை என்ற முடிவு எடுக்கப்பட்டது. கட்சியின் பொதுக்குழுவுக்கே அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவு தான் இறுதியானது. அதில் நீதிமன்றங்கள் தலையிட வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

அதிமுக கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் தனக்கு ஆதரவாக உள்ளனர். எனவே தற்போதைய ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு அற்பமான ஒன்று ஓபிஎஸ் அதிமுகவிற்கு எதிராக செயல்படுபவர். எனவே இந்த விவகாரத்தில் கட்சியை உரிமை கூறவோ, நிவாரணம் பெறவோ ஓபிஎஸ்-க்கு எந்த தகுதியும் இல்லை என இந்த பதில் மனுவில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment