தனது 10 வருட வாழ்க்கை குறித்து பேசிய நடிகை ரம்பா.
நடிகை ரம்பா தென்னிந்திய திரையுலகின் பிரபலமான நடிகை. இவர் சமீபத்தில் தனது 10 வருடகுடும்ப வாழ்க்கை குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது, ‘எனக்கும் என் கணவருக்கும் சில நேரங்களில் சண்டை வரும். நானும் பயங்கரமாக சண்டை போடுவேன் என்றும், சிறிது நேரம் கழித்து, ஒரு காபி போட்டு வந்து வைப்பார். அதற்கு பிறகு எனது கோபம் எல்லாம் புஷ்வானம் போல பறந்து போய்விடும் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், எனக்கு கடவுள் அருமையான குழந்தைகளை கொடுத்துள்ளார். அவர்களோட நான் மகிழ்ச்சியாக இந்த வாழ்க்கையை வாழ்கிறேன். மேலும், மீண்டும் தமிழில் நடிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த ரம்பா, இப்போது நான் ஒரு தாய். பழையபடி டூயட் எல்லாம் பாடியாட முடியாது. எனக்கேற்றவாறு, நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.