தீர்ப்பை நான் வரவேற்கிறேன்.. நீதி எவ்வளவு தாமதமாக இருந்தாலும் அது வெற்றி பெற்றது- ராஜ்நாத் சிங்..!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 2000 பக்க தீர்ப்பை வாசித்தார் எஸ்.கே.யாதவ். அதில், பாபர் மசூதி இடிப்பு என்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது அல்ல , அத்வானி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாபர் மசூதி இடிப்பிற்கு காரணமானவர்கள் என சிபிஐயால் நிரூபிக்க முடியவில்லை. சிபிஐ வழங்கிய ஒளி மற்றும் ஒலி ஆதாரங்களின் நம்பகத்தன்மையை நிரூபிக்க இயலவில்லை.

அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் பாபர் மசூதி இடிப்பை தடுக்க முயன்றனர். எனவே பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பு அளித்துள்ளார்.

இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பத்திவிட்டுள்ளார். அதில், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் ஸ்ரீ எல்.கே. அத்வானி, ஸ்ரீ கல்யாண் சிங், டாக்டர் முரளி மனோகர் ஜோஷி, உமாஜி  குற்றம் சாட்டப்பட்ட 32 பேரையும் விடுவித்த லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் வரவேற்கிறேன். நீதி எவ்வளவு தாமதமாக இருந்தாலும் அது வெற்றி பெற்றது என்பதை இது நிரூபிக்கிறது என  தெரிவித்துள்ளார்.

लखनऊ की विशेष अदालत द्वारा बाबरी मस्जिद विध्वंस केस में श्री लालकृष्ण आडवाणी, श्री कल्याण सिंह, डा. मुरली मनोहर जोशी, उमाजी समेत ३२ लोगों के किसी भी षड्यंत्र में शामिल न होने के निर्णय का मैं स्वागत करता हूँ। इस निर्णय से यह साबित हुआ है कि देर से ही सही मगर न्याय की जीत हुई है।

— Rajnath Singh (@rajnathsingh) September 30, 2020

author avatar
murugan