இந்தி வசனத்தை 100 முறையாவது படிக்கிறேன்…நடிகர் விஜய் சேதுபதி ஓபன் டாக்.!

நடிகர் விஜய் சேதுபதி தற்போது “DSP” எனும் திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் கூட சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி இந்தியில் பல படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக ஷாருக்கானுக்கு வில்லனாக “ஜவான்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்தி வசனத்தை 100 முறை படிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்களேன்- எந்தெந்த நடிகைகளுக்கு ரசிகர்கள் கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தினர் தெரியுமா..?

இது குறித்து பேசிய அவர் ” இந்தியில் 5 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன். ‘மாநகரம்’ படத்தில் முனீஸ்காந்த் செய்த ரோலை ‘மும்பைகர்’ படத்தில் செய்கிறேன். கத்ரீனா கைஃபுடன்   ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ திரைப்படத்தில் நடித்து வருகிறேன். மற்றோரு படம் ஷாகித் கபூரோட செய்கிறேன்.

அதைப்போல ‘காந்தி டாக்ஸ்” என  ஒரு மௌனப் படம் செய்யறேன். இந்த படங்கள் இந்தி படங்கள். இந்த படங்களின் வசனங்களை பேச கொஞ்சம் சிரமமாக இருக்கும்.  நம்ம மூளை தமிழில்தான் வேகமாகச் சிந்திக்கும். அப்படியே இந்தியிலும் சிந்திக்க முயற்சி எடுக்கிறேன். இந்தி வசனத்தை 100 முறையாவது படிக்கிறேன்” என தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment