அகிம்சையின் மகத்துவத்தை உலகறியச்செய்த மகாத்மா அவர்களை போற்றி வணங்குகிறேன் – முதல்வர்!

அகிம்சையின் மகத்துவத்தை உலகறியச்செய்த மகாத்மா அவர்களை போற்றி வணங்குகிறேன் என முதல்வர் வாழ்த்து பதிவு.

மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தலைவர்களும் அரசியல் அமைப்பினரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருவதுடன், அவரது நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தியும் வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆளுநர் துணை முதல்வர், அமைச்சர்கள் உடன் சென்று அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் மகாத்மா காந்தியின் பிறந்த நாள் குறித்து பதிவிட்டுள்ள முதல்வர், அறவழியில் போராடி சுதந்திரம் பெற்று அகிம்சையின் மகத்துவத்தையும் சிறப்பையும் உலகம் அறியச் செய்த அண்ணல் காந்தியடிகள் அவர்களின் 152 ஆவது பிறந்த தினத்தில் மகாத்மா அவர்களைப் போற்றி வணங்கி மகிழ்கிறேன் என கூறியுள்ளார். இதோ அந்த பதிவு,

author avatar
Rebekal