பெரியப்பாவாக சொல்கிறேன், ஒழுங்காக படி – ஸ்டாலினுக்கு எம்ஜிஆர் அறிவுரை.!

பெரியப்பாவாக சொல்கிறேன் அரசியலிலும் ஆர்வமாக இருக்க வேண்டும் என்று எம்ஜிஆர் தனக்கு அறிவுரை வழங்கியதாக முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர், பூந்தமல்லி நசரத்பேட்டையில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், அப்போது எம்ஜிஆர் மற்றும் ஸ்டாலின் சிறு வயதில் இருக்கும் புகைப்படத்தை மக்களிடம் காண்பித்து, நானும் எம்ஜிஆரும் சேர்ந்து இருக்குற போட்டோ என்று கூறி, இந்த புகைப்படத்தின் பின்னணி என்ன என்று ஒரு பெண்மணி என்னிடம் கேட்டார்.

அப்போ நான் சொன்னேன், 1971-ஆம் ஆண்டு அண்ணா மறைவுக்கு பிறகு கலைஞர் தலைமையில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் 184 இடங்களில் வெற்றி பெற்றது திமுக. அப்போது கலைஞர் கூறினார், நான்தான் ஒழுங்காக படிக்காமல் போயிட்டேன். நீனும் இதே வேலையாக இருக்க கூடாது. ஒழுங்கா படிக்கணும் என்று அறிவுரை கூறினார் கலைஞர்.

இதையடுத்து நிறைவு விழா நாடகம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய கலைஞர் ஸ்டாலினிடம் அறிவுரை கூறியுள்ளேன் என்று மேடையில் தெரிவித்தார். அடுத்து எம்ஜிஆர் உரையாற்றியபோது, உங்க அப்பா இப்படி சொன்னார். ஆனால் நான் உங்க அப்பாவா இல்ல, பெரியப்பாவாக இருந்து சொல்கிறேன், ஒழுங்கா படித்து, அதே நேரத்தில் எந்த அளவுக்கு நீ அரசியலில் ஆர்வத்துடன் இருக்கியோ அதையும் நீ ஒழுங்கா கவனிக்க வேண்டும் என்று எம்ஜிஆர் எனக்கு அறிவுரை கூறினார் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால், இப்போ எம்ஜிஆரை பற்றி முதல்வர் பழனிசாமி பேசிக்கொண்டு இருக்கிறார். என்றைக்காவது முதல்வர் பழனிசாமி எம்ஜிஆர் முகத்தை பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறாரா? எம்ஜிஆர் குறித்து எதாவது கேள்விப்பட்டிருக்கிறாரா? இன்னைக்கு ஒரு நாடகத்தை நடத்தி வருகிறார்கள். சட்டமன்ற தேர்தல் வருவதால் அவர்கள் பெயர்களை கூறிக்கொண்டு வருகிறார்கள் என்று விமர்சித்து பேசியுள்ளார்.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

502 Error.! திணறிய கூகுள்… பயனர்கள் அதிருப்தி.!

Google Down : கூகுள் தேடு பொறி, மற்றும் பிற கூகுள் சேவைகள் செயல்படவில்லை என சில பயனர்கள் புகார் அளித்து வருகின்றனர். நாம் உபயோகிக்கும் இணையத்தில்…

29 mins ago

நிலவில் தண்ணீர் இருக்கிறது.! உறுதி செய்தது நம்ம சந்திரயான்-3.!

Chandrayaan-3 : நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை சந்திராயன்-3 தரவுகளை கொண்டு ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்தாண்டு (2023) ஜூலை மாதம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய…

33 mins ago

வாகனங்களில் ஸ்டிக்கர் கட்டுப்பாடு! முக்கிய தகவல் இதோ!

Stickers : வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.  சமீபகாலமாக தனியார் வாகனங்களில் காவல்துறை, பத்திரிகையாளர், வழக்கறிஞர்,…

55 mins ago

விருதுநகர் கல்குவாரி விபத்து – நேற்று ஒருவர் இன்று ஒருவர் கைது.!

விருதுநகர் வெடிவிபத்து தொடர்பாக கல்குவாரியின் மற்றொரு உரிமையாளர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி மருந்து குடோனும் செயல்பட்டு…

1 hour ago

காங்கிரஸுக்கு சவால்.! இடஒதுக்கீடு குறித்து பிரதமர் மோடி ஆவேசம்.!

Election2024 : மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை மாற்ற மாட்டோம் என காங்கிரஸ் உத்தரவாதம் அளிக்குமா என பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும்…

2 hours ago

இன்னும் 4 போட்டி இருக்கு … பாத்துக்கலாம் ..- தோல்விக்கு பின் ருதுராஜ் !!

Ruturaj Gaikwad : நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு ருதுராஜ் கெய்க்வாட் தோல்வியின் காரணத்தை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் பஞ்சாப்…

2 hours ago