வாடிவாசல் பாகுபலி வசூல் கிட்ட வந்து நிற்கும் – கலைப்புலி தாணு..!!

வாடிவாசல் என் மனசுக்கு ஒரு பாகுபலி வசூல் கிட்ட வந்து நிற்கும் என்று நான் நம்புறேன் என்று படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் தனது 40 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பை நடிகர் சூர்யா விரைவில் முடித்துவிட்டி இயக்குனர் வெற்றி மாறன் இயக்கும் வாடிவாசல் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

ஆம் இயக்குனர் வெற்றி மாறன் இயக்கவுள்ள இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது.

இந்நிலையில் தற்போது, வாடி வாசல் படத்திற்கான படப்பிடிப்பு கண்டிப்பாக இந்த வரும்டம்  இறுதியில் தொடங்கும் என்றும் வாடிவாசல் பாகுபலி வசூல் கிட்ட வந்து நிற்கும் என்று நான் நம்புறேன் என்றும் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்து வாடிவாசல் படத்திற்காக காத்துள்ளனர். 

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.