மாநாடு திரைப்படம் நல்ல பெயரை வாங்கி தரும் என்று நம்புகிறேன் – கல்யாணி பிரியதர்ஷன்..!!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு தற்போது மாநாடு என்ற படத்தில் நடித்து வருகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் .

சமீபத்தில் மாநாடு படத்தின் டீசர் வெளியாகி வைரலாகியது குறிப்பிடத்தக்கது. பிரமாண்ட அரசியல் படமாக உருவாகும் இந்த மாநாடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தை வருகின்ற ரம்ஜான் தினத்தை முன்னிட்டு வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்த நடிகை கல்யாணி பிரியதர்ஷன் , சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் மாநாடு படம் குறித்த சில விஷியங்களை கூறியுள்ளார். இதில் பேசிய அவர் ” மாநாடு திரைப்படம் தமிழ் மக்களிடம் இருந்து எனக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுக்கும் என்று நம்புகிறேன். இயக்குனர் வெங்கட் பிரபு என்னிடம் இந்த கதையை கூறியவுடன் எனக்கு உடனடியாக பிடித்தது அதனானால் தான் சரி என்று கூறினேன் என்றும் கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.