விராட் கோலி சாதனையை முறியடிக்க நான் ஓய்வில் இருந்து வருகிறேன்…கிறிஸ் கெயில் பேச்சு.!!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் சுப்மன் கில் அதிரடியாக விளையாடி சதம் விளாசி குஜராத் அணியை வெற்றிபெற வைத்தார். இந்த போட்டியில்  பெங்களூர் அணி வீரர் விராட் கோலியும் அதிரடியாக விளையாடி சதம் விளாசி பல சாதனைகளை படைத்தார்.

நேற்று போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிகம் சதம் அடித்தவர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். இதற்கு முன்பு 6 சதங்கள் எடுத்து கிறிஸ் கெய்ல் இந்த சாதனையை படைத்திருந்த நிலையில், தற்போது 7 சதங்கள் அடித்து விராட் கோலி இந்த சாதனையை முறியடித்துள்ளார்.

இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கிறிஸ் கெய்ல் “என்னுடைய  சாதனையை கோலி கடந்துவிட்டார். நான் ஓய்வில் இருந்து மீண்டும் கிரிக்கெட் விளையாட வருகிறேன். அடுத்த வருடம் விராட் சாதனையை முறியடிப்பேன்” என நகைச்சுவையாக பேசியுள்ளார்.

மேலும், ஐபிஎல்லில் தொடர்ச்சியாக இரண்டு சதங்களை அடித்த முதல் பெங்களூர் வீரரும் விராட் கோலி தான். மேலும், கடைசியாக ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசி இருந்தார். அதனை தொடர்ந்து நேற்று குஜராத் அணிக்கு எதிரான போட்டியிலும் சதம் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.