நான் எந்த சோசியல் மீடியாவிலும் இல்லை – பசுபதி..!

நான் எந்த சோசியல் மீடியாவிலும் இல்லை என்று நடிகர் பசுபதி தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன் போன்ற எல்லா கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடிப்பவர் நடிகர் பசுபதி. தூள், விருமாண்டி, வெயில், மதுரை, சுள்ளான், கருப்பன், அசுரன், ஆகிய திரைப்படங்கள் பசுபதி நடித்த கதாபாத்திரம் பெரிதளவில் பேசப்பட்டது. அதைபோல் தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 22 -ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் ரங்கன் வாத்தியார் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக பல தரப்பிலிருந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் பசுபதி பெயரில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டு போஸ்ட் செய்து லைக்குகளை பெற்று வருகிறது. இதனையடுத்து சமீபத்தில் பசுபதி அளித்த பேட்டி ஒன்றில் ” சார்பட்டா பரம்பரை படத்திற்காக என்னை வாழ்த்திய அனைவர்க்கும் நன்றி. நான் எந்த சோசியல் மீடியாவிலும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.