மனைவியின் தவறான நடத்தை…. இரண்டு மகன்களை கொன்று உயிருக்கு போராடும் கணவர்..!

மதுரை மாவட்டதில் மனைவியின் கள்ளத் தொடர்பை கைவிட மறுத்ததால் பிள்ளைகளை விஷம் கொடுத்து கொன்ற கணவன்.

மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியை சேர்ந்தவர் உஷாராணி. இவர் அங்கு ஒப்பந்த பணியாளராக வேலை செய்து வருகிறார் இவருடைய கணவர் குமார், இவர் அந்த பகுதியில் ஆட்டோ ஒட்டி வருகிறார், இவர்களுக்கு சித்தார்த்தன் என்ற 6 வயது மகனும் கோப்பெருஞ் சோழன் என்ற 8 வயது மகன்களும் உள்ளனர், இந்நிலையில் உஷா ராணிக்கும் கனகராஜ் என்பவருக்கும் இடையே கள்ளதொடர்ப்பு இருந்து வந்துள்ளது இது உஷாராணி கணவர் குமாருக்கு தெரிய வந்ததும் இருவரையும் கண்டித்துள்ளார், ஆனாலும் இருவரும் கள்ளதொடர்பை விடவில்லை.

இந்நிலையில் இதனால் பலத்த கோபமடைந்த குமார் கனகராஜை கொலை செய்ய முடிவு செய்தார், குமார் வேகமகா வீட்டிலிருந்த ஒரு அருவாளை எடுத்துக்கொண்டு கனகராஜ் இருக்கும் இடத்திற்கு சென்று அருவாளை கொண்டு கழுத்தில் வெட்டியுள்ளார், உடனடியாக கனகராஜ் மயங்கி கிழவிழுந்துள்ளார், இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் வந்தவுடன், குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த கனகராஜை மருத்துவனக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர் மேலும் குமாரை போலீசார் தேடினர், குமார் தனது இரண்டு மகன்களுடன் வெள்ளையம்பட்டி பெரியகுளம் மாடக் கருப்பு கோவிலில், குமார், தனது இரு மகன்களுடன் குருணை மருந்து அருந்தி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார் இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர்

இந்நிலையில் அவருடை இரண்டு மகன்களும் இறந்தனர், குமார் மட்டும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து உஷாராணியை தேடி வருகின்றார்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.