அனைத்து பெண் ஊழியர்களுக்கும் விடுமுறை…! தெலுங்கானா அரசு அதிரடி…!

மார்ச்-8 மகளிர் தினத்தை முன்னிட்டு, மாநிலத்தில் அனைத்து பெண் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. 

இன்று நாடு முழுவதும் சர்வதேச மகளீர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் தெலுங்கானா முதல்வர் அலுவலகம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மார்ச்-8 மகளிர் தினத்தை முன்னிட்டு, மாநிலத்தில் அனைத்து பெண் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவிக்கிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் இந்த அறிக்கையில் தெலுங்கானா முதல்வர் கூறியுள்ளதாவது, ஆண்களுடன் அனைத்து துறையிலும் பெண்கள் போட்டி போடுகின்றனர்.  சிறந்து விளங்குகின்றனர்  என்றும், மக்கள் தொகையில் 50 சதவீதம் உள்ள பெண்கள் வாய்ப்பு வழங்கப்பட்டால் பல சாதனைகளை நிகழ்த்துவார்கள் என்று தெரிவித்திருந்தார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.