இயக்குனர் பா.ரஞ்சித் க்கு நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கியது உயர் நீதிமன்றம் !

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் மாமன்னர் ராஜராஜன் சோழன் குறித்து தவறாக பேசிய வழக்கில் இயக்குனர் பா.ரஞ்சித்திற்கு பல நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே இரண்டு முறை முன்ஜாமீன் வழங்க மறுத்து வந்த நிலையில் இன்று வழங்கியுள்ளது.
இன்று நீதிபதி ராஜமாணிக்கம் முன்னிலையில் நடந்த விசாரணையில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பா.ரஞ்சித் பேசியது உண்மையே என்று ஆதாரங்களுடன் காட்டினார். இதற்கு எதிர் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் பா.ரஞ்சித்ற்கு ஜாமின் வழங்கக் கூடாது என்றும் அவ்வாறு வழங்கினால் பலருக்கு இது முன் மாதிரி ஆகிவிடும் என்று தெரிவித்துள்ளார்.
இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி இயக்குனர் பா.ரஞ்சித்திற்கு முன்ஜாமீன் வழங்குவதாக உத்தரவிட்டார். மேலும்  இது போன்று இனிமேல் பேசினால் ஜமீனை ரத்து செய்யக்கோரி மாஜிஸ்திரேட் போலீசார் நீதிமன்றத்தை அணுகலாம் என்று தெரிவித்துள்ளார்.