ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா.! உணவுப் பாதுகாப்புத்துறை ஆய்வு.!

கோவை மாவட்டத்தில் உள்ள தொட்டிபாளையம் பகுதியில் இயங்கி வரும் நெல்லை லாலா ஸ்வீட் கடையின் உரிமையாளர் ஸ்ரீ ராம். இவர் மூலிகை மைசூர்பா மூலமாக ஒரே நாளில் கொரோனா குணமாகும் என விளம்பரம் செய்து வந்தார்.

இந்த மூலிகை மைசூர்பா-வை 19 மூலிகைகள் பயன்படுத்தி தயாரித்து வருவதாகவும், இதை சாப்பிடுபவர்களுக்கு கொரோனா ஒரே நாளில் குணமாகும் எனவும்  கூறினார். மேலும், ஒரு நாளைக்கு நான்கு துண்டுகள் சாப்பிட்டு வந்தால் விரைவில் கொரோனா நோயிலிருந்து விடுபடலாம், எந்த பக்க விளைவும் இல்லை எனவும் கூறினர்.

இந்நிலையில் ,  இன்று கோவை சின்னியம்பாளையம் பகுதியில் மூலிகை மைசூர்பா கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் ஆய்வு செய்தனர். மேலும், அனுமதியின்றி மூலிகை மைசூர்பா தயாரிக்கப்பட்டது தொடர்ந்து அந்தக் கடையின் உரிமையாளரிடம் அதிகாரிகள்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
murugan