வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவி எண் – தமிழக காவல்துறை

தமிழக போலீஸ் தரப்பில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்று, திருப்பூர் ரயில் நிலையத்தில் வதந்தியால் திடீரென்று வட மாநிலத்தவர்கள் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பீகார் தொழிலாளி சஞ்சய் குமார் என்பவர் கொலை செய்யப்பட்டதாக வதந்தி பரவியதையடுத்து, வட மாநில தொழிலாளர்கள் பலர் ரயில் நிலையத்தில் குவிந்தனர்.

இதனையடுத்து, இதுகுறித்து விளக்கமளித்த காவல்துறை தரப்பு, சஞ்சய்குமார் தண்டவாளத்தை அவர் கடக்கும் முயன்ற போது பீகார் தொழிலாளி ரயிலில் அடிபட்டு இறந்ததாகவும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தொழிலாளர் நிலை பற்றி ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழு தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதாக பீகார் முதல்வர் அறிவித்துள்ளார். தமிழக போலீஸ் தரப்பில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளதோடு, வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலியான வீடியோவை பரப்பினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment