மகாராஷ்டிராவில் ஹெலிகாப்டர் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!

மகாராஷ்டிராவில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் திடீரென ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இம்மாநிலத்தில் உள்ள ஜல்கான் பகுதியில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். மேலும், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஹெலிகாப்டரில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், ஒருவருக்கு பலத்த காயமடைந்ததால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், இப்பகுதியில் நடந்த இந்த சம்பவத்திற்கு காவல்துறையினருடன் இணைந்து உள்ளூர் மக்களும் மீட்பு பணியில் உதவியிருப்பது குறிப்பிடத்தக்கது.