திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை..!

வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் மற்றும் புதுசேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள  ஆவடி, அம்பத்தூர், திருமுல்லைவாயில், பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து உள்ளது.
பூந்தமல்லி, போரூர், வளசரவாக்கம், குன்றத்தூர், மாங்காடு, மதுரவாயல் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.இன்றும் ,நாளையும் தமிழகத்தில்  கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
 

author avatar
murugan