தமிழகத்தில் இரவு நேரத்தில் வெளுத்து வாங்கிய கனமழை.! இன்னும் 2 நாட்கள் நீடிக்கும்.!

தமிழகத்தில் நேற்று இரவு நேரத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இன்னும் 2 நாட்களுக்குகனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நேரத்தில் நேற்று பெய்த மழையின் காரணமாக வெயிலின் தாக்கம் சுற்று குறைந்து பொது மக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. நேற்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக இரவு நேரத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.

வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழையானது பெய்துள்ளது என்றும் இதன் காரணமாக மாநில முழுவதும் மழைக்கு சாதகமான சூழல் இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நேற்று மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது 60 இடங்களில் கனமழையும், 13 இடங்களில் மிக கனமழையும், மற்ற இடங்களில் மிதமான மழையும் பெய்துள்ளது.

அதே போல 2 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சிபகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை  ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதில், நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார், அரியலுார், பெரம்பலுார், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், இன்று கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.