தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.இந்த நிலையில்  வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகுவதால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடலில் 55 கி.மீ. வேகத்தில் காற்றுவீசும் என்பதால் மீனவர்கள் 2 நாட்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும்  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.