அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மிக பலத்த மழை!

அடுத்த 24 மணி நேரத்தில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று தகவல்.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

இதுபோன்று அடுத்த 24 மணி நேரத்தில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, காரைக்கால், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, சிவகங்கை, ராமநாதபுரம், தருமபுரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

மேலும், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் நாளை ஒரு சில இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. இதுபோன்று, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மற்றும் தூத்துக்குடியில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment