வெப்ப நோய்கள் – மாநிலங்களில் கண்காணிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்!

வெப்ப அலையால் ஏற்படும் நோய்கள் குறித்து நாள்தோறும் கண்காணிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தல்.

கோடைகாலத்தில் ஏற்படும் நோய்களை தினமும் கண்காணிக்க கோரி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும், யூனியன் பிரதேச செயலாளர்களுக்கும்  மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.

வெப்பத்தின் தாக்குதலால் ஏற்படும் நோய்களை தடுக்க நாளை முதல் தினமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசிய மருந்துகள், ஐஸ் பேக், தேவையான மருந்து கருவிகளை வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. வெப்பம் தொடர்பான நோய்கள் குறித்த கண்காணிப்பை மார்ச் 1 அதாவது நாளை முதல் அனைத்து மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment