சரவணபவன் அதிபர் ராஜகோபாலை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற உயர்நீதிமன்றம் அனுமதி

ஜீவஜோதி கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் சிக்கிய சரவணபவன் அதிபர் ராஜகோபால் நரம்புத்தளர்ச்சி நோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 9- ம் தேதி ஆம்புலன்ஸ் மூலம் வந்து நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.

பின்னர் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கைதிகளுக்கு உரிய சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். ஸ்டான்லி மருத்துவமனையில் போதிய வசதி இல்லை என சரவணபவன் அதிபர் ராஜகோபால் மகன் சரவணன்  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில்  ராஜகோபாலை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை பெற சென்னை உயர்நீதிமன்றம் தற்போது அனுமதி கொடுத்து உள்ளது.

author avatar
murugan