அதிகமான குழந்தைகளை பெற்று கொள்ளுங்கள் .., இல்லாவிட்டால் இந்தியா இந்துக்கள் இல்லா நாடக மாறிவிடும் – யதி நரசிங்கானந்த்!

அதிகமான குழந்தைகளை பெற்று கொள்ளுங்கள் என இந்துக்களிடம் ஜாமீனில் வெளியாகிய அர்ச்சகர் யதி நரசிங்கானந்த் தெரிவித்துள்ளார்.

ஹரித்துவார் வெறுப்பு பேச்சு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளனர் தான் தேவி கோயில் தலைமை அர்ச்சகர் யதி நரசிங்கானந்த். இவர் ஜமீனிலிருந்து வெளியாகிய இரு நாட்களிலேயே டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பல சர்ச்சை பேச்சுக்களை பேசியிருந்தார்.

தற்போதும் இவர் வரும் 10 ஆண்டுகளில் இந்தியா இந்துக்கள் இல்லாத நாடாக மாறுவதை தடுக்க அதிக குழந்தைகளை உருவாக்க வேண்டும் என இந்துக்களிடம் வலியுறுத்தியுள்ளார். மேலும் 2009ஆம் ஆண்டு இந்து அல்லாத ஒருவர் தான் பிரதமராக வருவார் என கணித கணக்கீடுகள் கூறுகிறது. எனவே நாம் அவ்வாறு நடக்க விடக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal