இன்று ஒரு நாள் முதல்வராகும் 19 வயது இளம் பெண்.!

தேசிய பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு, உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது கிருஷ்டி கோஸ்வாமி இன்று ஒரு நாள் மாநில முதல்வராக பொறுப்பேற்கிறார். பி.எஸ்.சி வேளாண்மை மாணவர் கோஸ்வாமி, ஹரித்வாரின் கிராமத்தில் வசித்து வருகிறார், அங்கு அவரது தந்தை மளிகை கடை நடத்தி வருகிறார்.

பொறுப்பேற்ற அந்த பெண்,”மக்கள் நலனுக்காக பணியாற்றும் போது இளைஞர்கள் நிர்வாகத்தில் சிறந்து விளங்க முடியும் என்பதை நிரூபிக்க நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்” என்று கூறினார்.

இதற்கிடையில், இவர் 2018 இல் உத்தரகண்ட் பால் விதான் சபாவின் முதல்வராக இருந்தார். மேலும், 2019 ஆம் ஆண்டில், பெண்கள் சர்வதேச தலைமைத்துவத்தில் பங்கேற்க கோஸ்வாமி தாய்லாந்து சென்றார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.