முத்தூட் பைனான்ஸ்: நாளை ஓசூர் அழைத்துவரப்படும் கொள்ளையர்கள்.!

முத்தூட் பைனான்ஸ் நிறுவன அலுவலகத்தில் கொள்ளை வழக்கில் கைதான 9 பேரும் நாளை ஓசூர் அழைத்துவரப்படுகின்றனர்.

ஐதராபாத் சமசத்புர் பகுதியில் நேற்று கைது செய்யப்பட்ட 9 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறை முடிவு செய்துள்ளது. ஓசூரில் உள்ள முத்தூட் நிதி நிறுவனத்தில் ஜனவரி 22-ஆம் தேதி ரூ.12 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கைது செய்யப்பட்ட 7 பேரிடம் இருந்து 25 கிலோ தங்கம் நகை, பணம், துப்பாக்கி தோட்டாக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டனஎன்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்