அடுத்தடுத்த விலகும் வீரர்கள்.. ஐபிஎல் தொடரிலிருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்த ஹர்பஜன்!

ஐபிஎல் தொடரிலிருந்து முழுமையாக விலகுவதாக சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.

உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், இந்தாண்டு ஐபிஎல் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19- ம் தேதி முதல் நடைபெறும் என ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்தார்.

இதன்காரணமாக துபாய் சென்றுள்ள 8 அணியின் வீரர்கள், பயிற்சி மேற்கொள்ளவுள்ளார். இந்தநிலையில், ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் விலகுவதாக அறிவித்தார். சில தனிப்பட்ட காரணங்கள் காரணமாக அவர் இந்த ஐபிஎல் தொடரிலிருந்து முழுமையாக விலகி, இந்தியா திரும்பவுள்ளதாக தெரிவித்துள்ளார்

ஏற்கனவே அணியின் சின்ன தல ரெய்னா, சில தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து திடீரென விலகி இந்தியா திரும்பிய நிலையில், தற்போது ஹர்பஜனும் விலகியது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.