விமான நிலைய அதிகாரிகளால் தொல்லை..! 1,700 இண்டிகோ ஊழியர்கள் வேலைநிறுத்தம்..!

விமான நிலைய அதிகாரிகளால் துன்புறுத்தப்படுவதாக சுமார் 1,700 இண்டிகோ ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மும்பை விமான நிலையத்தில் சுமார் 1,700 இண்டிகோ ஊழியர்கள், விமான நிலைய அதிகாரிகளால் துன்புறுத்தப்படுவதாகக் கூறி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்பின், இண்டிகோ நிறுவனம் வேலைநிறுத்தம் பற்றி அறிந்திருப்பதாகவும், நிர்வாகத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இண்டிகோ நிறுவனம் கூறுகையில், எங்கள் அனைத்து செயல்பாடுகளும் பாதிக்கப்படாமல் இருக்கும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம். எங்கள் முக்கியக் கொள்கைகளில் ஒன்று ஊழியர்கள் அனைவரையும் கவனித்துக்கொள்வது மற்றும் இண்டிகோ எப்போதும் பணியாளர் நலன் மற்றும் நல்வாழ்வில் முழு கவனிப்புடன் உள்ளது என்று தெரிவித்துள்ளது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.