கட்டுக்கடங்காத ரசிகர் கூட்டம்.! ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட அர்ஜென்டினா வீரர்கள்.!

அர்ஜென்டினாவில் கால்பந்தாட்ட வீரர்கள் உலக கோப்பையை வென்று அணிவகுத்து சென்றபோது கூட்டம் அதிகமானதால் ஹெலிகாப்டர் மூலமாக வீரர்கள் மீட்கப்பட்டனர். 

2022 ஃபிஃபா உலகக்கோப்பை தொடரில் பிரான்ஸ் நாட்டை 4-2 என்கிற பெனால்டி ஷூட் கோல் கணக்கில் சாம்பியன் பட்டத்தை வென்றது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி.

 உலக கால்பந்தாட்ட சாம்பியன் பட்டத்தை வென்று நாடு திரும்பிய வீரர்களை வரவேற்க்க அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் மக்கள் வீதியெங்கும் திரண்டனர்.ரசிகர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த அவர்களை வாழ்த்தி வரவேற்றனர்.

இதில் நேரம் ஆக ஆக கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடியதால் வீரகர்களின் பாதுகாப்பு கருதி ஊர்வலம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மேலும் வீரர்களை சாலை மார்க்கமாக கொண்டு செல்ல முடியாத காரணத்தால் ஹெலிகாப்டர் உதவியுடன் அவர்களை மீட்டனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment