ஹத்ராஸ் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யவில்லை என உ.பி. ஏ.டி.ஜி.பி பிரசாந்த் குமார் தெரிவித்தார்.
ஹத்ராஸ் வழக்கு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உ.பி ஏ.டி.ஜி பிரஷாந்த் குமார் , உயிரிழந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என்று அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக இளம்பெண் இறந்துவிட்டார் என்று பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது. மேலும், எஃப்எஸ்எல் அறிக்கை மாதிரிகளில் விந்தணுக்களைக் கண்டுபிடிக்கவில்லை.
இது முற்றிலும் தவறான தகவல்களில் சாதி பதற்றத்தை உருவாக்க ஒரு சதி எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. சாதி பதற்றத்தை உருவாக்க தவறான தகவல்களை பரப்ப முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான இளம்பெண் கடந்த மாதம் 14-ம் தேதி புல் அறுத்துக் கொண்டிருந்தார். அப்போது, இளைஞர்கள் 4 பேர் அந்த இளம் பெண்ணை தூக்கிச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, கடுமையாக தாக்கியும், நாக்கை வெட்டியதாகவும் தெரிகிறது.
பலத்த காயங்களுடன் அந்த அப்பெண் மீட்கப்பட்டு ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், உடல்நிலை மோசமடைந்ததால், டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அந்த பெண் மாற்றப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, இரண்டு வாரங்களாக உயிருக்கு போராடி வந்த நிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…