திரிபுராவில் மாமேதை லெனின்,அதேபோல் தமிழகத்தில் தந்தை பெரியார் சிலை,உத்தரபிரதேசத்தில் மவானா பகுதியில் அம்பேத்கரின் சிலையை அகற்றி சேதப்படுத்திய பிஜேபி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மீதும் ,மேலும் இது குறித்து பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி கடந்த 7ஆம் தேதி தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ஜுனன் தலைமயில் அனைத்து கட்சி சார்பில் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது.இந்நிலையில் அன்று நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா படத்தை எரித்த கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதில் விதிமுறைகளை மதிக்காமல் படத்தை எரித்ததாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் அர்ச்சுனன்,மாநகர செயலாளர் ராஜா,ஜனநாயக வாலிபர் சங்க நகர செயலாளர் கண்ணன்,இந்திய மாணவர் சங்க நிர்வாகி அமர்நாத் மற்றும் சிலர் மீது வழக்குபதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
பதநீர் - கொளுத்தும் கோடையின் வெப்பத்திலிருந்து நம்மை காக்கும் பதநீரின் குளு குளு நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம். பதநீர் தயாரிக்கும் முறை: பதநீர் பனை மரத்திலிருந்து…
Prabhu Deva Performance: உச்சி வெயிலில் காத்து கிடந்தும் கடைசி நிமிடத்தில் வராத பிரபுதேவா வருத்தம் தெரிவித்து வீடியோ கால் செய்த வளம். சர்வதேச நடனத் தினத்தை…
Dheena Re Release : ரீ -ரிலீஸ் ஆன தீனா படம் இதற்கு முன்பு வெளியான கில்லி படத்தின் முதல் நாள் வசூலா முறியடித்துள்ளதா என்பதை பார்க்கலாம்.…
Rinku Singh : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் முதன்மை அணியில் இடம்பெறாமல், ரிசர்வ் வீரராக தேர்வு…
EPass : ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளுக்கு பிரத்யேக இ பாஸ் வழங்க இன்று வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கோடைகாலம் ஆரம்பித்து வெயில் மக்களை வாட்டி வதைத்து…
Virudhunagar : வெடிமருந்து வேன்களை அருகருகே வைத்து, வெடிமருந்துகளை இறக்கியதே விபத்துக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் பகுதியில் செயல்பட்டு வந்த கல்குவாரியில்…