ஆண்களே…. சிகப்பழகான முகம் வேண்டுமா? இதை செய்யுங்கள் போதும்!

பெண்களை போலவே ஆண்களும் சிகப்பழகான முகம் பெற வேண்டும் என விரும்புவது வழக்கம் தான், அதற்க்கான இயற்க்கை முறை ஒன்றை இன்று நாம் பார்க்கலாம். 

இயற்கையாக சிகப்பழகு பெற

முதலில் ஒரு பௌலில் அரிசி மாவு எடுத்து கொள்ளவும். அதனுடன் பால் சேர்த்து நன்றாக கிளறவும். கத்தியின்றி கிளறியதும் ஒரு ஸ்பூன் அளவுக்கு தேன் சேர்க்கவும். தேன் சேர்ப்பதால் முகத்தில் உள்ள முடிகள் வெள்ளையாகிவிடும் என அஞ்ச வேண்டாம், லேசாக அதனுடன் எலுமிச்சை சாறும் சேர்த்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் காய விடவும்.

அதன் பின் சாதாரண தண்ணீரால் முகத்தை கழுவவும். ஆனால், சோப்பு உபயோகிக்க வேண்டாம். அதன் பின்பு காப்பி தூள் மற்றும் தேன் கலந்து அந்த கலவையை முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் வைத்திருந்து கழுவவும். இது போல வாரத்திற்கு இரு முறை செய்து வந்தாலே போதும். விரும்பிய முக அழகை பெறலாம். ஆண்களின் கடினமான சருமத்தையும் அரிசி மாவு மற்றும் தேன் பளபளப்பாக்கி விடும்.

author avatar
Rebekal