குட்கா வழக்கு மார்ச் 20-க்கு ஒத்திவைப்பு!

குட்கா முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணையை மார்ச் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.

குட்கா முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணையை மார்ச் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம். அதிமுக ஆட்சியில் அதிகரிசிகளுக்கு லஞ்சம் கொடுத்து குட்கா விற்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்தது. ஏற்கனவே, இந்த வழக்கு இன்று சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன் விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில், பிழைகளை திருத்திய குற்றப்பத்திரிகை இன்னும் தயாராகவில்லை. கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என கோரிக்கை  விடுத்ததால், வழக்கு விசாரணை இன்றைக்கு தள்ளிவைக்கப்பட்ட நிலையில், மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

cbicourt17

இதனிடையே, தமிழ்நாட்டில் புகையிலை பொருட்கள் விற்பனை, கிடங்குகளில் வைப்பது உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கபட்டது. ஆனால் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இந்த சர்ச்சையில் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர், முன்னாள் டிஜிபி, சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயரதிகாரிகள், போலீஸ் உயரதிகாரிகளின் பெயர்களும் அடிபட்டது.

gutkacaseaiadmk

இதனைத்தொடர்ந்து, குட்கா ஊழல் தொடர்பாக திமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த வழக்கில் டெல்லி சிபிஐ போலீஸார் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் 2021ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் கைது செய்யப்பட்டுள்ள மாதவராவ் உள்ளிட்ட 6 பெயர்கள் மட்டுமே இடம் பெற்றதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கபட்டது. முன்னாள் அமைச்சர்கள், டிஜிபி உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அதிகாரிகள் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை என கூறப்பட்டது.

dmkgutkacase

மேலும், அந்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அதனை திருத்தம் செய்து தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் குட்கா வழக்கு விசாரணை சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், தற்போது மார்ச் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகையில் பிழைகளை முழுமையாக திருத்த சிபிஐக்கு மேலும் அவகாசம் வழங்கி ஒத்திவைக்கப்பட்டது

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment