மசூதியாக மாற்றப்படும் குருத்துவார் – இந்தியா கடும் எதிர்ப்பு

குருத்துவாரை மசூதியாக மாற்ற முடிவு  செய்துள்ள நிலையில் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சாகிதி அஸ்தானா என்ற பிரசித்தி பெற்ற  குருத்துவார் பாகித்தானில் உள்ள லாகூரில் உள்ளது.இந்த கோயில் சீக்கியர்களின் புனித தலமாக கருதப்படுகிறது. இதற்கு அருகில் மசூதி ஒன்றும் உள்ளது.இதனிடையே குருத்துவார் மசூதிக்கு சொந்தமானது என்றும் அதனை மசூதியாக மாற்ற பாகிஸ்தான்  முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் அரசின் இந்த நடவடிக்கைக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அனுராக் கூறுகையில், குருத்துவார்  தொடர்பான செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பாகிஸ்தானிடம் இது தொடர்பாக கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விவகாரம் குறித்து உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.