வருகின்ற செப்.2 முதல் 6-8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு..!குஜராத் அரசு அறிவிப்பு..!

குஜராத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், வரும் செப்டம்பர் 2-ம் தேதி முதல் 6-8 ஆம் வகுப்புகளுக்கு  பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் பலர் பாதிக்கப்பட்ட நிலையில், பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி தற்போது அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனை அடுத்து தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், பல மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் குஜராத்தில் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் வரும் செப்டம்பர் 2-ம் தேதி முதல் 6-8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க அம்மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இதற்கு முன்னர் கடந்த ஜூலை26-ம் தேதியில் இருந்து 9-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.