ஆளுநர் தமிழிசைக்கு 2 ஆலோசகர்கள் நியமனம்..!

தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசகர்களாக சந்திரமவுலி, மகேஸ்வரி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அரசின்  நலத்திட்ட உதவிகளை தடுக்கிறார் என கிரண்பேடி மீது பல்வேறு புகார்களை நாராயணசாமி மத்திய உள்துறை மற்றும் குடியரசு தலைவரிடம் புகார் அளித்த நிலையில், துணைநிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண் பேடி நீக்கப்பட்டு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் ஆக நியமனம் செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, கடந்த 18-ஆம் தேதி புதுச்சேரி மாநில புதிய துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பை தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஏற்றார். இந்நிலையில், தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆலோசகர்களாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்திரமவுலி, மகேஸ்வரி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

author avatar
murugan