ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சூதாட்டம்.! போலீசார் வந்ததும் தெறித்து ஓடிய அரசு வாகன ஓட்டுனர்கள்.!

சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு வாகன ஓட்டுனர்கள் சூதாட்டம் விளையாடி சிக்கியுள்ளனர். 

தடை செய்யப்பட்ட ரம்மி சூதாட்டத்தை ஆட்சியர் அலுவலகத்திலேயே வைத்து விளையாடி அரசு வாகன ஓட்டுனர்கள் சிக்கிய சம்பவம் சேலத்தில் அரங்கேறியுள்ளது.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு வாகன ஓட்டுனர்கள் அலுவலக வளாகத்தில் கார் நிறுத்துமிடத்தில் சூதாட்டம் விளையாடி வந்துள்ளனர்.

விஷயம் அறிந்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தவுடன் சூதாட்டம் விளையாடி கொண்டிருந்த அரசு வாகன ஓட்டுநர்கள் தலைதெறிக்க ஓடியுள்ளனர்.

அவர்கள் விளையாடிய சீட்டுக்கட்டுக்களை பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment